Friday, August 14, 2009

wetness of rain by sreedevi nair /Tamil tr

மழையின் ஈரம்
மழையினூடே பார்த்த முகங்களை ஞாபக படுத்துங்கள்
முதியவர்கள் குழந்தைகள் ஆகிறார்கள்
குழந்தைகள் வேறு உலகத்திற்கு செல்கிறார்கள் -
அவர்கள் வயதை மறந்து .
மழை என்பது ஒவ்வொருவருடைய கற்பனை.
மழை என்பது
சுருக்கங்களையும் ,வலியையும் ,சந்தோஷங்களையும்
துக்கங்களையும்
மாற்றுகிறது .
ஒரே ராகம் தான் மழையில் கேட்கும் ,
ஒரே பாடல்தான் கேட்கும் ,
இந்த மழையின் சப்தத்தில்
முன்னே கேட்ட பழைய பாடல்கள் எல்லாம்
மறுபடியும் கேட்கும் .
அந்த உலகின் சட்டங்கள் எல்லாம் வித்தியாசமானவை .
அந்த உலகம் சிறகு விரித்து பறக்கும்போது ,
சப்தமிடும் தவளைகளும் , பறக்கும கரப்பான் பூச்சிகளும்,
மழையும் , அந்த இரவும் இணைந்து ,
இந்த உலகின் உணர்ச்சிகளுக்கு
மறுபக்கமாக அமைகின்றன .
இந்த உலகின் உணர்ச்சிகளை போலவே
இந்த மழையின் கூறிய அம்புகள்
கைவிடப்பட்டவர்களை கவலைப்பட வைக்கிறது .
மழைக்கு மனது இல்லை .
மழையை உணர முடிந்தவர்கள்
அவர்களுக்கும் ஒரு மனது இருக்கிறது என்ற
ரகஸ்யத்தை உணராதவர்கள் ஆகிறார்கள் .
மழை என்பது சரித்திர காலத்திற்கு முன்னால் இருந்து
ஒரு ரகச்யமாகவே இருக்கிறது.
விஞ்ஞானம் கண்டுபிடிக்க முடியாத
ரகச்யமாகவே இருக்கிறது!!!!!

When raining takes place, it brings happiness , nostalgia,sorrow and a comination of emotions to all those who feel or see ........ but for the poet this brings out like a video all the emotions,destitudes,frogs, cockroaches, darkness, sufferings, mindlessness of humans,transformations of emotions.......... for some, rain is a medium through which they travel down the memory lane and be in the past mastigating the happenings in the past ................

No comments: