Wednesday, August 19, 2009

Before the birth of silence by Sreedevi Nair in Malayalam / tr in Tamil

Before the birth of silence by Sreedevi Nair
அமைதி அவதறிக்கும் முன்னால்

ஒரு சப்தம் கேட்டது .
அது எல்லா வீடினுள்ளும் ,குளியல்
அறைகளுக்குள்ளும் சென்று வந்தது .
அது நிர்வானமகியது .
கடைத்வீதிகளிலும், குளங்களிலும் ,
ஜாடிகளிலும் , மோட்டார் வாகனங்களிலும்
சென்று திரும்பியது .
ஒரு துணையை தேடியது .
கிடைக்கவில்லை.
சப்தங்கள் எல்லாம் மாமிச பட்சினிகள் .
அதனுடைய குட்டிகளையே அவை
சாப்பிட்டுவிடும் .
பெரியவைகள் சின்னவற்றை
சாப்பிட்டுவிடும்.
சின்னவை பெரியவை மூச்சு
விடும் பக்கத்தில் கூட போகாது .
சிறிய மீன்களை போல சிறிய
சப்தங்கள் அங்கும் இங்கும்
ஓடுகின்றன.
சிறிய சப்தங்கள் உள்ளேயே
இருக்கின்றன ,
இல்லையேல் அவைகள் விழுங்கப்படும்
என்னும் பயத்தினால் .
அவை பிறப்பு எடுக்கும் முன்னேயே
வாழ துவங்குகின்றன .
அவைகள் தான் அமைதி.
அதனுடைய அர்த்தங்கள் எல்லாம்
குழப்பி வைக்கப்பட்டிருக்கின்றன .
ஆமாம், சில காலங்களில் வெறுமையே
மிஞ்சுகின்றன.
நாம் பிரக்கமட்டோம் என்று சத்தியம்
செய்துகொண்டு வாழ்கின்றன .
அவைகள் பிறப்பதற்கு முன்பு
அமைதி சப்தமாக மாற முடியுமா ?
இறப்பிற்கு பின்னால் இருப்பதை
அவைகள் எப்படி அறியும் .?


No comments: