Thursday, August 27, 2009

Clouds by Sreedevi Nair

மேகங்கள்
மேகங்கள் மறைத்து கொண்டிருந்த
வானத்தை வேண்டும் என
வேண்டினேன் .
சப்தமான மழையினூடே
என்னுடைய தனிமை
புலியை போல பார்த்தது.
மேகங்கள் வானத்தை மறைத்ததை
அறிந்து கொள்ள
மழையினூடே இறங்கினேன்.
இரவின் பயமுறுத்தும்
இசையை போல வானம்
இருளாக இருந்தது.
மேகங்கள் கலைந்தபோது
மழையும் நின்று விட்டது.
இந்த மழையும் மேகங்களும்
கைகோர்த்து போஸ்ட் மாடர்ன்
குறியீடுகளை போல என்னை
கேலி செய்கிறதா ?
மேகங்கள் என்ன மழைக்கு
கைகாட்டிகளா ?
மேகங்களின் கைகாட்டிகள்
எங்கோ உறுமின .
மழையின் குறியீடுகள்
பன்மடங்காக மாறின,
எல்லா அர்த்தங்களையும்
எடுத்து கொண்டு.
மழைக்கும் மேகத்திற்கும்
புரியாத அர்த்தங்களை தன்னுள்
அடக்கிக்கொண்டு.

No comments: