Thursday, August 27, 2009

Two Dogs by Sreedevi Nair

இரண்டு நாய்கள்
ஒரு பணக்காரனின் நாய்
ஏழையின் நாயை பார்த்து
பொறாமை பட்டது,
அது தன்னிச்சையாக
சுற்றி கொண்டிருந்ததை பார்த்து.
பணக்கார நாய்க்கு
வாழ்வதற்கும் ,சாவதற்கும் ,
காவலாளிகள் இருந்தார்கள்.
தெரு நாய்க்கு அதன் சாவு
சொந்தமாக இருந்தது.
அந்த சாவை முநிசிபாளிட்டியோ
கடைக்கரர்களோ பிடுங்கிக்கொள்ளமுடியாது .
பணக்கார நாய் அந்த ஏழை நாயின்
சாவை பிடுங்கிக்கொண்டு சந்தோஷமடைய
பார்த்தது.
அந்த ஏழை நாய் தன சாவை அடைய
தன்னிடம் வந்து கெஞ்ச வேண்டும் என
எதிர்பார்த்து.
அந்த சாவின் உரிமையை பிடுங்க
நினைத்தது.
ஆனால் இறப்பு பெரிய காற்றாக
அந்த பணக்கார நாய்க்கும்
தெரு நாய்க்கும் ஒன்றாக
வந்தது.
The irony is the rich dog even wants to have the right of the death of the poor dog.How richness goes beyond head and how heart is erased from the parlance of human existence.

No comments: