Wednesday, June 3, 2009

Flowering Tree / Sreedevi Nair in Malayalam


பூத்துகுலுங்கும் மரம்
மலர்கள் என்னை குறியிட்டன
நான் ஒரு பூக்கும் மரம் என்று .
மலர்களை தேடி அவைகள் வந்தன .
மலர்களின் கனவுகள் உண்மை என்று
நினைக்கிறார்கள் பலர் .
நான் என்னுடைய கொடையால்
மலர்களை நிரப்பினேன் .
மலர் என்பது ஒரு செய்திஅல்ல .
மலர் ஒரு செய்தியாக கூடாது .
மலர்கள் உதிர்வதற்காகதான் .
நேற்று உதிர்ந்த மலர்கள் யாருக்கும்
தேவை இல்லை .
உதிர்ந்த மலர்களை நினைத்து கொண்டு
இருப்பது இயற்க்கைக்கு எதிரானது .
எங்கும் சாயாமல் பூத்து குலுங்கும் மரம்
தனிமையை உணரக்கூடாது.
தனிமை என்பது வேண்டுமென்றே
பெறப்படுவது .
தனிமையாக வாழ்க்கையை பார்த்தால்
வாழ்க்கை என்பது சலிப்பாக இருக்கிறது .
நான் பூக்களை உதிர்த்து விட்டு
என்னுடைய தனிமையை தனிமை படுத்தினேன் .
என்னிடம் பூத்த மலர்களுக்கு
நறுமணம் இல்லை .
முடிவாக மலர்கள் என்னை மறந்தன .
எந்த மலரும் என்னை அறியவில்லை .
ஒவ்வொரு மலரும் வேகமாக வளர
சென்று விட்டன.
வளர்ச்சி என்ன பாவமா ?
வளர்ச்சி முழுமையாகும் போது
அழகும் நறுமணமும் பெறபட்டாலும்
வீழ்ச்சி என்பது தவிர்க்கமுடியாதது .
எனக்கு சலிப்பாக இருக்கிறது .
மேல் நோக்கி மீண்டும் மீண்டும்
பார்த்து கொண்டு இருக்கும்போது
என்னை யாரவது கீழிறக்கி வைக்க
முடியுமா .

We could comprehend the motherly perspective in this poem............ expecting and longing for the children's affection and nothing more in return from them.Symbolism is perfect in humming the parental love towards the children.

No comments: