Friday, August 28, 2009

Bats by Sreedevi Nair

வவ்வால்கள்
கவலை அடைவதற்கு வவ்வால்கள்
தலைகீழாக தொங்குகின்றன.
அப்படி கவலை படும்போது
அதன் முன் ஜன்மங்களை
ஞாபக படுத்தி கொள்கின்றன .
அப்படி வருத்தமாய் இருப்பது
அவைகளுக்கு ஒரு சுத்த படுத்திக்கொள்ளும்
வழி.
இந்த கடுமையான வாழ்வின் இருட்டில்
இருந்து சுத்தபடுத்திக்கொள்ளும்
வழி.
இந்த சுத்தம் என்பது இரும்பை
காய்ச்சி அடிக்கும் போது
இரும்பு இளகுவதை போன்றது.
வவ்வால்களுக்கு மனிதர்களின்
எதார்த்தம் தெரியும்.
மனிதர்களுக்கு தெரியாமலேயே
மனிதர்களுக்குள் இருக்கும் எதார்த்தம்.

The bats , for us, symbolises nothing more than bats hanging upside down, regurgitating what has been eaten and digested; but for the poet , this seems to give a different scenario.

Thursday, August 27, 2009

Two Dogs by Sreedevi Nair

இரண்டு நாய்கள்
ஒரு பணக்காரனின் நாய்
ஏழையின் நாயை பார்த்து
பொறாமை பட்டது,
அது தன்னிச்சையாக
சுற்றி கொண்டிருந்ததை பார்த்து.
பணக்கார நாய்க்கு
வாழ்வதற்கும் ,சாவதற்கும் ,
காவலாளிகள் இருந்தார்கள்.
தெரு நாய்க்கு அதன் சாவு
சொந்தமாக இருந்தது.
அந்த சாவை முநிசிபாளிட்டியோ
கடைக்கரர்களோ பிடுங்கிக்கொள்ளமுடியாது .
பணக்கார நாய் அந்த ஏழை நாயின்
சாவை பிடுங்கிக்கொண்டு சந்தோஷமடைய
பார்த்தது.
அந்த ஏழை நாய் தன சாவை அடைய
தன்னிடம் வந்து கெஞ்ச வேண்டும் என
எதிர்பார்த்து.
அந்த சாவின் உரிமையை பிடுங்க
நினைத்தது.
ஆனால் இறப்பு பெரிய காற்றாக
அந்த பணக்கார நாய்க்கும்
தெரு நாய்க்கும் ஒன்றாக
வந்தது.
The irony is the rich dog even wants to have the right of the death of the poor dog.How richness goes beyond head and how heart is erased from the parlance of human existence.

Sans peace by Sreedevi Nair

அமைதியின்மை
கங்கையிலும் யமுனையிலும்
விடுதலையை தேடினேன்.
ஒவ்வொரு யாத்திரையின் போதும்
முடித்து கொள்ளலாம் என்றிருந்தேன்.
பசுக்கள் மேய போகின்றன ,
திரும்பி வருவதில்லை.
பறவைகளின் கூடுகள் காற்றில்
கீழே விழுந்து விடுகின்றன.
கடல் சீற்றத்தின் போது
மீன்கள் சிதறி எறிய படுகின்றன.
நெருப்பு,நீர்,காற்று, பிணம் ,
எல்லாவற்றின் முன்பு விழுந்து
வணங்கினேன்.
அரிசி கஞ்சி காய்ச்சி ,
எறும்பு,பூனை,காகம்,பிச்சைக்காரன்
எல்லோருக்கும் கொடுத்தேன்.

This poem shows the mind of those who don't really 'live' but pass on time to escape from this mortal coil; whose mind is explained in this poem to certain extent, and I believe an extension of the poem is needed .......... or the continuity of the poem is left to our imagination ?.

Singular by Sreedevi Nair

ஒருமை
=======
உடம்பு பன்மைதான்
மனதும் பன்மைதான்
உலகம் பன்மை
மொழி பன்மை
பெயரும் பன்மை.
மனது உடம்பை
விட்டு அகலும் போது
வார்த்தைகள் கவிதையை
விட்டு செல்லும் போது
வானம் மேகத்தை விட்டு
செல்லும் போது,
மலர்கள் மரத்தை விட்டு
செல்லும் போது ,
விடுதலை அடையும் போது,
ஒருமை என்னும் நான் பிறந்தேன்.
What the poet is trying to convery ......... is it a compromise between dualism and monism?

Poetic by Sreedevi Nair in Malayalam

கவித்துவமாக
வாழைபூ உதிர்வதை போல
பனித்துளிகள் பூக்களில் இருந்து
உதிர்வதை போல,
மேகங்கள் கருமையாக
மாறுகின்றன .
கவிதை எங்கேயோ
தொலைந்துவிட்டது .
எப்பொழுதெல்லாம் கவிதையை
நினைகின்றோமோ அப்பொழுதெல்லாம்
கவித்துவம் பொங்குகின்றது.
எந்த மலரும் கவிதை அல்ல .
கவித்துவமும் அடைய முடியாது.

Nothing more to say except being poetic in mood by reading this poem.

Words Again by Sreedevi Nair in malayalam

மறுபடியும் வார்த்தைகள்
எந்த வித தயையும் இன்றி
என்னுடைய வார்த்தைகள்
என்னை விட்டு சென்று விட்டன.
அநாகரீகமான வார்த்தைகள்
கவிதையாக மாற
முயன்றபோது நான் எதிர்த்தேன்.
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் கவிதையாக மாறவேண்டும்.
கவிஞர்கள் எங்களுக்கு எதிரி!
வார்த்தைகள் கவிஞரை விட்டு
அவர் இடத்தை அடைய
முயன்றன.
எங்கே தளம் இருக்கிறது
வார்த்தைகள் கவிதையாக ?
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் தளத்தை வாங்குகிறோம் .
வார்த்தைகள் உண்மையை
தேடின.
அந்த முயற்சியில் உலகயே
வாங்க .
முடிவில் முயற்சியில்
தோல்வியடைந்தன .
வாசலில் தனிமையில் நின்றன.
நான் கேட்டேன்:
என்ன நடந்தது?
வார்த்தைகள் சொல்லின:
நாங்கள் தோல்வியுற்றோம் .
தனிமையில் உண்மையை கண்டு
பிடிக்க முடியாது.
ஆனால் உண்மையை தேடுபவர்களுக்கு
எவ்வளவு தேவை அவ்வளவு கொடுக்க இயலும்.

Words per se don't and can't do anything on their own..... human intelligence ....... the poet only can and will...........this is like a newspaper owners even wanting to write , cant do since writer is a separate genre.

Prey by Sreedevi Nair

இரை
முன்னொரு நாள் இந்த
கோடைக்கால பறவைகள்
வந்தனவா ?
என்னை இந்த தசைகளால்
ஆனா கூண்டில் இருந்து
விடுவிப்பீர்களா ?
மனித தன்மை அற்ற
கோடை பாதைகளில் நான்
ஒரு உடம்பு மட்டும்தான் .
என்னை அப்படியே
விழுங்கி விடலாம்.
நான் ஒரு சரியான இரை .
சரியான இரை ஆவதற்கு
எதாவது வழியில் தயார்
செய்து கொள்ள வேண்டுமோ ?
நான் ஒரு இரை ஆவதற்கு
முடிவு செய்து விட்டேன்.
வாழ்வின் கஷ்டங்களை கண்டவர்கள்
எதை பற்றியும் குறை கூறுவதில்லை .
எல்லா வற்றையும் அனுபவித்தாயிற்று.
இவைகள் இல்லாதிருந்தால்
என்னுடைய வாழ்க்கை
முழுமையற்றதாகி இருக்கும்.
இப்பொழுது எல்லாம் புரிகிறது.
இரை,உடம்பு,வாழ்க்கை எல்லாம்.

Is human capable of grasping the reality behind human existence only after going through the path of difficulties,troubles, turbulence in life? Can't we comprehend the life we live while we are in the rat race? Is the incomprehensible comprehension eluding us?