Thursday, August 27, 2009

Poetic by Sreedevi Nair in Malayalam

கவித்துவமாக
வாழைபூ உதிர்வதை போல
பனித்துளிகள் பூக்களில் இருந்து
உதிர்வதை போல,
மேகங்கள் கருமையாக
மாறுகின்றன .
கவிதை எங்கேயோ
தொலைந்துவிட்டது .
எப்பொழுதெல்லாம் கவிதையை
நினைகின்றோமோ அப்பொழுதெல்லாம்
கவித்துவம் பொங்குகின்றது.
எந்த மலரும் கவிதை அல்ல .
கவித்துவமும் அடைய முடியாது.

Nothing more to say except being poetic in mood by reading this poem.

Words Again by Sreedevi Nair in malayalam

மறுபடியும் வார்த்தைகள்
எந்த வித தயையும் இன்றி
என்னுடைய வார்த்தைகள்
என்னை விட்டு சென்று விட்டன.
அநாகரீகமான வார்த்தைகள்
கவிதையாக மாற
முயன்றபோது நான் எதிர்த்தேன்.
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் கவிதையாக மாறவேண்டும்.
கவிஞர்கள் எங்களுக்கு எதிரி!
வார்த்தைகள் கவிஞரை விட்டு
அவர் இடத்தை அடைய
முயன்றன.
எங்கே தளம் இருக்கிறது
வார்த்தைகள் கவிதையாக ?
வார்த்தைகள் சொன்னது:
நாங்கள் தளத்தை வாங்குகிறோம் .
வார்த்தைகள் உண்மையை
தேடின.
அந்த முயற்சியில் உலகயே
வாங்க .
முடிவில் முயற்சியில்
தோல்வியடைந்தன .
வாசலில் தனிமையில் நின்றன.
நான் கேட்டேன்:
என்ன நடந்தது?
வார்த்தைகள் சொல்லின:
நாங்கள் தோல்வியுற்றோம் .
தனிமையில் உண்மையை கண்டு
பிடிக்க முடியாது.
ஆனால் உண்மையை தேடுபவர்களுக்கு
எவ்வளவு தேவை அவ்வளவு கொடுக்க இயலும்.

Words per se don't and can't do anything on their own..... human intelligence ....... the poet only can and will...........this is like a newspaper owners even wanting to write , cant do since writer is a separate genre.

Prey by Sreedevi Nair

இரை
முன்னொரு நாள் இந்த
கோடைக்கால பறவைகள்
வந்தனவா ?
என்னை இந்த தசைகளால்
ஆனா கூண்டில் இருந்து
விடுவிப்பீர்களா ?
மனித தன்மை அற்ற
கோடை பாதைகளில் நான்
ஒரு உடம்பு மட்டும்தான் .
என்னை அப்படியே
விழுங்கி விடலாம்.
நான் ஒரு சரியான இரை .
சரியான இரை ஆவதற்கு
எதாவது வழியில் தயார்
செய்து கொள்ள வேண்டுமோ ?
நான் ஒரு இரை ஆவதற்கு
முடிவு செய்து விட்டேன்.
வாழ்வின் கஷ்டங்களை கண்டவர்கள்
எதை பற்றியும் குறை கூறுவதில்லை .
எல்லா வற்றையும் அனுபவித்தாயிற்று.
இவைகள் இல்லாதிருந்தால்
என்னுடைய வாழ்க்கை
முழுமையற்றதாகி இருக்கும்.
இப்பொழுது எல்லாம் புரிகிறது.
இரை,உடம்பு,வாழ்க்கை எல்லாம்.

Is human capable of grasping the reality behind human existence only after going through the path of difficulties,troubles, turbulence in life? Can't we comprehend the life we live while we are in the rat race? Is the incomprehensible comprehension eluding us?

Clouds by Sreedevi Nair

மேகங்கள்
மேகங்கள் மறைத்து கொண்டிருந்த
வானத்தை வேண்டும் என
வேண்டினேன் .
சப்தமான மழையினூடே
என்னுடைய தனிமை
புலியை போல பார்த்தது.
மேகங்கள் வானத்தை மறைத்ததை
அறிந்து கொள்ள
மழையினூடே இறங்கினேன்.
இரவின் பயமுறுத்தும்
இசையை போல வானம்
இருளாக இருந்தது.
மேகங்கள் கலைந்தபோது
மழையும் நின்று விட்டது.
இந்த மழையும் மேகங்களும்
கைகோர்த்து போஸ்ட் மாடர்ன்
குறியீடுகளை போல என்னை
கேலி செய்கிறதா ?
மேகங்கள் என்ன மழைக்கு
கைகாட்டிகளா ?
மேகங்களின் கைகாட்டிகள்
எங்கோ உறுமின .
மழையின் குறியீடுகள்
பன்மடங்காக மாறின,
எல்லா அர்த்தங்களையும்
எடுத்து கொண்டு.
மழைக்கும் மேகத்திற்கும்
புரியாத அர்த்தங்களை தன்னுள்
அடக்கிக்கொண்டு.

Wednesday, August 26, 2009

white egg by Sreedevi Nair in malayalam

வெள்ளை முட்டை
கருப்பு கோழியும் வெள்ளை
கோழியும் முட்டை இட்டன.
வெள்ளை முட்டைகள்!
இரண்டும் போட்டிபோட்டு
கருப்பு முட்டையிட முயன்றன.
முட்டை வெள்ளையாகத்தான்
இருந்தன.
வெள்ளைகொழி, கருப்புகொழி
இதில் திறமைசாலி யார?
வெள்ளை கோழி எல்லா
இடத்திலும் சென்று தான்
திறமைசாலி என்று பறை சாற்றியது.
கருப்பு கோழி கலவரப்பட்டது ,
தன்னுடைய வெள்ளை முட்டை
பொய்யானதா?
கருப்புகொழி வீணாக முயன்றது,
கருப்பு முட்டை இடுவதற்கு .

The colour complex in human beings is well explained in a subtle way, as is imagined by the fair skinned individuals and dark skinned individuals as well.

The following link is of importance regarding the colour complex written by a writer Jeyamohan

http://www.jeyamohan.in/?p=5971

Beggar woman by Sreedevi Nair

பிச்சைகாரி
நான் கண்ணை மூடி நின்றிருந்தேன்
சாலையில் சிறிது நேரம் .
குழந்தையை போல ,
உடலின் உள்ளே உள்ள
உறுப்புக்களை போல நடித்தேன்.
விழும் சில்லறைகளுக்கு குறைவில்லை.
என்னையே தேற்றிகொண்டேன்.
நான் கற்றுக்கொண்டேன் இந்த
தந்திரத்தை .
உலகம் என்னை சுற்றி
இயங்குகிறது.
பிச்சை எடுப்பது ஒரு
பழக்கமாக ஆகிவிட்டது.
சில்லறைக்கு மட்டுமல்ல
அன்பிற்கும் தான்.
பிச்சை எடுக்கும் வாழ்க்கை
எப்போதும் நிரந்திரமில்லை.
அது ஒவ்வொரு நிமிடதைபோல .
அது ஒரு அறிவு முதிர்ந்த நிலை.
எல்லா இடங்களிலும் வாழ்க்கை
இருப்பதில்லை.
அது ஒரு அறிவு,உள்ளிருக்கும்
காற்றைபோல.

words by Sreedevi Nair

வார்த்தைகள்
சில நேரங்களில் வார்த்தைகள் அம்புகள்
மற்ற நேரங்களில் தவளைகள் .
அது குதித்து கொண்டே நகரும்.
வார்த்தைகள் பல வகைகள் .
பச்சோந்திகள்,புறாக்கள், ட்ய்நஸரஸ் போல .
வார்த்தைகளுக்கு மட்டும் தான் நிறம் மாற
தெரியும்.
அவைகள் எப்பொழுதாவதுதான்
தன்னை பற்றி சிந்திக்கின்றன.
பேசும்போதும் சந்தோசம் அடையும் போதும்..
ஒரு வார்த்தை பேசப்படும்போது அதன்
தொடர்புகள் தேவையில்லை .,
எதுவும் தேவையில்லை.
வார்த்தைகள் எதை குறிக்கிறதோ
அப்பொழுது உயிரோட்டம் இல்லை..
வார்த்தைகளுக்கு உயிர் தேவையில்லை.
ஆனால் மனிதர்களுக்கு தேவை.
மனிதன் வார்த்தைகளை சீரழிக்கிறான்.