Wednesday, August 26, 2009

Night by Sreedevi Nair

இரவு
இரவு மழைத்துளியாக மாறி
மறைந்து கொண்டது .
ஒரு பறவையின் கருப்பான
இறகில் மறைந்து கொண்டது.
எங்கெல்லாம் பறவை பறந்து
சென்றதோ
அங்கெல்லாம் இரவு
சென்றது.
விடியல் வரும்போது ,
பறவை இறக்கை விரித்து அடித்த போது
இரவுக்கு வெறுமையாக இருந்தது .
இறக்கியில் இருந்து கையை விட்டு
கீழே விழுந்தது.

Thursday, August 20, 2009

Love's remains by Sreedevi Nair in Malayalam

Love's remains

அன்பின் மீதம்

இந்த மனதில் அன்பு இல்லை .

அன்பு விட்டு சென்ற மனதின்

நெருப்பிலிருந்து புகை மட்டும்தான்

கிளம்புகிறது.

மற்றவர்கள் தூக்கியெறிந்த

அன்பின் மீதங்களை

சேகரித்து அதை எரிப்பதுதான்

என்னுடைய விதியாகி இருக்கிறது .

நான் காத்திருந்தேன் அன்பின்

மீதங்களை சேகரிக்க ,

அதை தூக்கி எறிந்தவர்கள் ,

யுத்தகளத்திற்கு சென்றவர்கள் ,

பணத்தை திருட போனவர்கள்-

நான் எந்தவித புன்னியதுவமும்

பாராட்டவில்லை அவர்களைப்பற்றி .

எவ்வவளவு சுதந்திரமாக உள்ளேன்.

Wednesday, August 19, 2009

Different flowers by Sreedevi Nair in Malayalam / Tamil translation

Different flowers

வித்தியாசமான் மலர்கள்

என்னுடைய உடல் முழுவதும்

பல வகையான மலர்களால் ஆனது.

ஒரு மலர் சிவப்பு நிறம் பூசியது ,

ஹைபிச்கிஸ் மலரை போல .

பல மலர்களின் பெயர்கள் தெரியாது.

மலர்கள் அதிசயமான புதிர்களை

போல வாழ்கின்றன .

எந்த விதமான வித்தியாசமில்லாத

என்னுடைய உடம்பில் இருந்து

எந்த மலர்களையும் பறிப்பது இல்லை .

எனக்கு இந்த மலர்கள் தேவையும் இல்லை.

சில சமயம் வேறு மலர்களுக்காக தான்

இந்த பயணத்தை தொடர்கிறேன்.

Before the birth of silence by Sreedevi Nair in Malayalam / tr in Tamil

Before the birth of silence by Sreedevi Nair
அமைதி அவதறிக்கும் முன்னால்

ஒரு சப்தம் கேட்டது .
அது எல்லா வீடினுள்ளும் ,குளியல்
அறைகளுக்குள்ளும் சென்று வந்தது .
அது நிர்வானமகியது .
கடைத்வீதிகளிலும், குளங்களிலும் ,
ஜாடிகளிலும் , மோட்டார் வாகனங்களிலும்
சென்று திரும்பியது .
ஒரு துணையை தேடியது .
கிடைக்கவில்லை.
சப்தங்கள் எல்லாம் மாமிச பட்சினிகள் .
அதனுடைய குட்டிகளையே அவை
சாப்பிட்டுவிடும் .
பெரியவைகள் சின்னவற்றை
சாப்பிட்டுவிடும்.
சின்னவை பெரியவை மூச்சு
விடும் பக்கத்தில் கூட போகாது .
சிறிய மீன்களை போல சிறிய
சப்தங்கள் அங்கும் இங்கும்
ஓடுகின்றன.
சிறிய சப்தங்கள் உள்ளேயே
இருக்கின்றன ,
இல்லையேல் அவைகள் விழுங்கப்படும்
என்னும் பயத்தினால் .
அவை பிறப்பு எடுக்கும் முன்னேயே
வாழ துவங்குகின்றன .
அவைகள் தான் அமைதி.
அதனுடைய அர்த்தங்கள் எல்லாம்
குழப்பி வைக்கப்பட்டிருக்கின்றன .
ஆமாம், சில காலங்களில் வெறுமையே
மிஞ்சுகின்றன.
நாம் பிரக்கமட்டோம் என்று சத்தியம்
செய்துகொண்டு வாழ்கின்றன .
அவைகள் பிறப்பதற்கு முன்பு
அமைதி சப்தமாக மாற முடியுமா ?
இறப்பிற்கு பின்னால் இருப்பதை
அவைகள் எப்படி அறியும் .?


In search of me by Sreedevi Nair in Malayalam / tr to Tamil

In search of Me by Sreedevi Nair in Malayalam
transalated to Tamil
என்னை நான் தேடியபோது
என் விரோதிகளை நினைத்தேன் .
இந்த நகரத்தின் எங்கே ஆள் அரவம்
இல்லாமல் எதோ நாயசெத்து கிடப்பதை
போல உள்ள இடத்திற்கு சென்றேன் .
அங்கே என்னை காணவில்லை .
சவங்களை தலைகீழாக
தொங்கவிட்டிருந்தார்கள் .
கடைசி மூச்சு அந்த ஆட்டின்
மூக்கிலிருந்து வெளியேறுவதை
பார்த்தேன்.
'broiler' கோழிகள் அந்த
கொலையாளிக்கான கூண்டுகளில்
காதுகொண்டிருப்பதை பார்த்தேன்.
அரசாங்க அதிகாரிகள் அந்த எலும்பு துண்டுகளை
தேடி அந்த தெருக்களில் வந்தபோது
என்னை நான் கண்டுபிடிக்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்து நிர்வாணமாகி கட்டிலுக்கு
சென்றபோது என்னை காணவில்லை .
என்னை அனைத்து கொள்ளும் இடியாக
வந்தது நானா ?

An Empty Bottle by Sreedevi Nair in Malayalam

An Empty Bottle by Sreedevi Nair in Malayalam tr to Tamil
காலி பாட்டில்
காலி மினரல் தண்ணீர் பாட்டில்
சாலை ஓரத்தில் கிடக்கிறது .
அந்த சாம்பல் நிற பிப்சுப்ப்பான
பாட்டிலை கவனிக்காமல் கடந்து
போகிறார்கள்.
சில சிறுவர்கள் அந்த பாட்டிலை
கசக்கி பையினுள் இட்டு
செல்கிறார்கள் .
காலி பாட்டில் ஒரு தத்துவம் .
மனிதனும் காலி பாட்டில்
போலத்தான்.
காலி பாட்டில்கள் மட்டுமல்ல
மனிதர்களும் குப்பைதொட்டிகளில்
கிடக்கிறார்கள் கவனிப்பார்கள் இன்றி.
சாலை ஓர குப்பைகளில் உயிரோட்டம்
இருக்கிறது .
அங்கே எந்த துணையும் இன்றி ,
முகாந்திரம இன்றி ,ஆண் பெண் என்ற பாகு
பாடின்றி , பெண்ணீயம் இல்லாது
குப்பைகளில் கிடக்கிறார்கள்.
நன்றி சொல்லவேண்டும் ஜனநாயகத்திற்கு .
அரசாங்கத்திற்கு மனிதர்கள் தேவை இல்லை .
ஆனால் முகவரி,வீடு,வோட்டு ,பணம்
எல்லாம் தேவை.

Friday, August 14, 2009

wetness of rain by sreedevi nair /Tamil tr

மழையின் ஈரம்
மழையினூடே பார்த்த முகங்களை ஞாபக படுத்துங்கள்
முதியவர்கள் குழந்தைகள் ஆகிறார்கள்
குழந்தைகள் வேறு உலகத்திற்கு செல்கிறார்கள் -
அவர்கள் வயதை மறந்து .
மழை என்பது ஒவ்வொருவருடைய கற்பனை.
மழை என்பது
சுருக்கங்களையும் ,வலியையும் ,சந்தோஷங்களையும்
துக்கங்களையும்
மாற்றுகிறது .
ஒரே ராகம் தான் மழையில் கேட்கும் ,
ஒரே பாடல்தான் கேட்கும் ,
இந்த மழையின் சப்தத்தில்
முன்னே கேட்ட பழைய பாடல்கள் எல்லாம்
மறுபடியும் கேட்கும் .
அந்த உலகின் சட்டங்கள் எல்லாம் வித்தியாசமானவை .
அந்த உலகம் சிறகு விரித்து பறக்கும்போது ,
சப்தமிடும் தவளைகளும் , பறக்கும கரப்பான் பூச்சிகளும்,
மழையும் , அந்த இரவும் இணைந்து ,
இந்த உலகின் உணர்ச்சிகளுக்கு
மறுபக்கமாக அமைகின்றன .
இந்த உலகின் உணர்ச்சிகளை போலவே
இந்த மழையின் கூறிய அம்புகள்
கைவிடப்பட்டவர்களை கவலைப்பட வைக்கிறது .
மழைக்கு மனது இல்லை .
மழையை உணர முடிந்தவர்கள்
அவர்களுக்கும் ஒரு மனது இருக்கிறது என்ற
ரகஸ்யத்தை உணராதவர்கள் ஆகிறார்கள் .
மழை என்பது சரித்திர காலத்திற்கு முன்னால் இருந்து
ஒரு ரகச்யமாகவே இருக்கிறது.
விஞ்ஞானம் கண்டுபிடிக்க முடியாத
ரகச்யமாகவே இருக்கிறது!!!!!

When raining takes place, it brings happiness , nostalgia,sorrow and a comination of emotions to all those who feel or see ........ but for the poet this brings out like a video all the emotions,destitudes,frogs, cockroaches, darkness, sufferings, mindlessness of humans,transformations of emotions.......... for some, rain is a medium through which they travel down the memory lane and be in the past mastigating the happenings in the past ................